• Apr 28 2024

கொழும்பின் முக்கிய இடத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்: தொடரும் பதற்ற நிலை!

Sharmi / Jan 23rd 2023, 1:48 pm
image

Advertisement

கொழும்பு - விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதியின் குறிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில்  ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை தாண்டி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



கொழும்பின் முக்கிய இடத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்: தொடரும் பதற்ற நிலை கொழும்பு - விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதியின் குறிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில்  ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை தாண்டி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement