• Sep 17 2024

புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும்! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 4:00 pm
image

Advertisement

புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் புங்குடுதீவு வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


க. பொ.த. உயர்தர பரீட்சையில்  வர்த்தக பிரிவில் தோற்றி  3 A சித்திகளை பெற்ற  புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின்  உயர்கற்கைக்கு  உதவும் நோக்கில்  புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர்  திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் முயற்சியினால்  ஒரு  இலட்சத்து ஐம்பதினாயிரம் ( 150 , 000 ) ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது . அண்மையில் புங்குடுதீவு குறிச்சுகாடு சந்தியில் அமைந்துள்ள தீவகம் பொது மைதானத்தில் நடைபெற்ற  இசை நிகழ்வில் இவ் ஊக்குவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . எமது மண்ணின் மைந்தர்களான  . திவ்வியன் சண்முகநாதன் ,  சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் ஆகியோர் தலா 50000 என்ற அடிப்படையில் மேற்படி நற்காரியத்தினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக செயற்பட்டிருந்தனர் . 


அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில்  நடைபெற்ற இசை நிகழ்வுகளில் அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடிய இசை நிகழ்வாக  கருதப்படுகின்ற  இந்நிகழ்ச்சியானது புங்குடுதீவின் வரலாற்றில் ஓர் சிறப்பான சம்பவமாகும் .  

அத்தோடு இங்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படாது  சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும்  நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்த  மாபெரும் இசைநிகழ்வினை  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக்குழுவினரான  கனடா  உறவுகளான திரு. சோம சச்சிதானந்தன் , கென் கிருபா , ந.உதயன் , கோபாலபிள்ளை தீபன் , அகிலன் முத்துக்குமாரசுவாமி ,  சமூகம் ஊடகம்  ஆ.  கிருபானந்தன் , திவ்வியன் கதிர்காமநாதன்  , சசி  சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன்  மற்றும் சுவிஸ் சுரேஷ் செல்வரட்ணம்  ,  புங்குடுதீவு மைந்தர்களான கருணாகரன் நாவலன் , கருணாகரன் குணாளன்  ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும் . 


புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் samugammedia புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் புங்குடுதீவு வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. க. பொ.த. உயர்தர பரீட்சையில்  வர்த்தக பிரிவில் தோற்றி  3 A சித்திகளை பெற்ற  புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின்  உயர்கற்கைக்கு  உதவும் நோக்கில்  புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர்  திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் முயற்சியினால்  ஒரு  இலட்சத்து ஐம்பதினாயிரம் ( 150 , 000 ) ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது . அண்மையில் புங்குடுதீவு குறிச்சுகாடு சந்தியில் அமைந்துள்ள தீவகம் பொது மைதானத்தில் நடைபெற்ற  இசை நிகழ்வில் இவ் ஊக்குவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . எமது மண்ணின் மைந்தர்களான  . திவ்வியன் சண்முகநாதன் ,  சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் ஆகியோர் தலா 50000 என்ற அடிப்படையில் மேற்படி நற்காரியத்தினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக செயற்பட்டிருந்தனர் . அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில்  நடைபெற்ற இசை நிகழ்வுகளில் அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடிய இசை நிகழ்வாக  கருதப்படுகின்ற  இந்நிகழ்ச்சியானது புங்குடுதீவின் வரலாற்றில் ஓர் சிறப்பான சம்பவமாகும் .  அத்தோடு இங்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படாது  சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும்  நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்த  மாபெரும் இசைநிகழ்வினை  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக்குழுவினரான  கனடா  உறவுகளான திரு. சோம சச்சிதானந்தன் , கென் கிருபா , ந.உதயன் , கோபாலபிள்ளை தீபன் , அகிலன் முத்துக்குமாரசுவாமி ,  சமூகம் ஊடகம்  ஆ.  கிருபானந்தன் , திவ்வியன் கதிர்காமநாதன்  , சசி  சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன்  மற்றும் சுவிஸ் சுரேஷ் செல்வரட்ணம்  ,  புங்குடுதீவு மைந்தர்களான கருணாகரன் நாவலன் , கருணாகரன் குணாளன்  ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும் . 

Advertisement

Advertisement

Advertisement