கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன்,கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள காரியாலயங்களின் செயலாளர்கள்,அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.