கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தனது தாயை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தாயொருவர் தனது மகன் தன்னையும், குடியிருப்பாளர்களையும் தாக்குவதாக கதிர்காமம் பொலிஸில் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் 4 உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, மறைந்திருந்த மகன் முச்சக்கரவண்டியின் முன்பக்க கண்ணாடியை தடிகளால் தாக்கிவிட்டு பயந்து ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.