மானிப்பாய் பிரதேசசபையினால், J/134 நவாலி வடக்கு முதியோர் சங்கத்தின் (பகல் பராமரிப்பு நிலையம்) முதியோருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் ஜெபநெசன், பிரதேசசபை உறுப்பினர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் சத்துணவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.