யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் செயற்பாடு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது
இன்று(15) மாலை 2 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மருத்துவ பீட தமிழ் மாணவர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.