பொருளாதார படுகொலையாளிகளை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது, இந்த குற்றத்தை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பாதிப்பினால் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரடைந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நான் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் 'எனது மருமகனின் வியாபாரம் தொடர்பில் நான் அறிந்திருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார்.
அவருக்கு அக்காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தான் தற்போது ராஜபக்சர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
இதனையே கர்மவினை என்பார்கள். ராஜபக்சர்களை கர்மவினை தொடரும், எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும்.” என்றார்.
ராஜபக்சர்களை கர்மவினை தொடரும், எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும். கடுமையாக சாடும் பொன்சேகா samugammedia பொருளாதார படுகொலையாளிகளை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது, இந்த குற்றத்தை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார பாதிப்பினால் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நான் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் 'எனது மருமகனின் வியாபாரம் தொடர்பில் நான் அறிந்திருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார்.அவருக்கு அக்காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தான் தற்போது ராஜபக்சர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.இதனையே கர்மவினை என்பார்கள். ராஜபக்சர்களை கர்மவினை தொடரும், எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும்.” என்றார்.