பள்ளி மாணவி ஒருவரை அவரது ஆசிரியர் கர்ப்பமாக்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன் என்பவர் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில், வில்வேந்திரன் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி வந்துள்ளார்.
இதனை நம்பிய அந்த சிறுமியும் அவரை காதலித்த நிலையில் பின்னர் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
சில நாட்கள் சென்றதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டமையால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த வேளை மாணவி கர்ப்பமடைந்திருப்பது தெரிய வந்ததுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, வில்வேந்திரன் தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்த அதற்கு அவர் தமறுத்துள்ளார்.
வில்வேந்திரனின் நடவடிக்கையால் சினமடைந்த சிறுமி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க வழக்கு பதிவு செய்த பொலிசார் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வாறாக ஆசிரியரால் மாணவி ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.