தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொள்வதற்கு சின்னம் தேவையில்லை எனவும் நல்ல எண்ணமே தேவை என வடமாகாண கடலோடிகள் அமைப்பின் இணைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை விசனம் வெளியிட்டுள்ளார்.
நேற்று யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மக்களின் நலன் தான் இலக்காக இருந்தால் அதனை எட்டுவதற்கு எதற்கு சின்னம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீதிகளில் போராடி கொண்டு இருக்கின்ற பெற்றோர்களின் கண்ணீர் அரசியல்வாதிகளின் குடும்பத்தை எரிக்கும் என்றும் அவர்களின் கண்ணீர் ஏமாற்று அரசியல்வாதிகளை ஒருபோது நிம்மதியாக வாழ விடாது என்றும் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.