கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் சுமார் 63 வயதுடையவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.