• May 19 2024

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்..! samugammedia

Chithra / Jun 8th 2023, 11:46 am
image

Advertisement

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் கான்ஸ்டபிள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் காயமடைந்து பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு கான்ஸ்டபிள்கள் தற்போது நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு கான்ஸ்டபிள் ஒருவருக்கு பல் உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த கான்ஸ்டபிள் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மிரிஹான தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்களுக்கு ஏற்பட்ட பரிதாபம். samugammedia கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் கான்ஸ்டபிள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் காயமடைந்து பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இரண்டு கான்ஸ்டபிள்கள் தற்போது நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு கான்ஸ்டபிள் ஒருவருக்கு பல் உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலில் காயமடைந்த கான்ஸ்டபிள் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.மிரிஹான தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement