கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி ஒருவர் அவரை பிரிந்த வலியை தானே புத்தகமாக எழுதி வெளியிட்ட சம்பவம் அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கோரி என்ற பெண்ணும் எரிக் ரிச்சின் என்ற ஆணும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கடந்த வருடம் மார்ச் மாதம், தனது கணவர் எரிக் ரிச்சின் மர்மமாக உயிரிழந்ததாக கோரி தெரிவித்துள்ளார்.
பின்னர் கணவரின் இறப்பினாலும், அவர் தன்னுடன் இல்லாமையாலும் தான் மன விரக்தியில் இருப்பதாக புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆனால், மனைவி கோரி தன்னை விஷம் தந்து கொல்ல முயற்சிப்பதாக எரிக் இறப்பதற்கு முன்னர் தெரிவித்து வந்ததாக அவரது நண்பர்களும், உறவினர்களும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகமடைந்த பொலிஸார் கோரியின் செல்போன் மற்றும் கணினியை சோதனையிட்ட வேளை போதை மருந்து வாங்கி அதனை மதுவில் கலந்து கொடுத்து எரிக்கை கொலை செய்ததே மனைவி தான் என ஓராண்டிற்குப் பின்னர் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 33 வயதான கோரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
,