• Apr 30 2024

உலக வரலாற்றில் இளம் வயது பெண் பிரதமர்..! உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!samugammedia

Sharmi / Jun 6th 2023, 7:10 pm
image

Advertisement

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிற்கு சிறந்த சேவைக்காக கௌரவ  விருது வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் பிரதமராக  2017 ஆம் ஆண்டு ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றுள்ளார். அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவ்வாறான சூழலில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது  நியூசிலாந்து மக்களுடன் மற்றும் உலக நாடுகளையும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2 ஆவது  மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கௌரவ  விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன், இந்த விருதை ஏற்றுக் கொள்வது பற்றி தான் இரண்டு மனதாக இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனி நபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தனது  குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் தன்னுடைய  வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க தன்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


உலக வரலாற்றில் இளம் வயது பெண் பிரதமர். உயரிய விருது வழங்கி கௌரவிப்பு.samugammedia நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிற்கு சிறந்த சேவைக்காக கௌரவ  விருது வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் பிரதமராக  2017 ஆம் ஆண்டு ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றுள்ளார். அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்வாறான சூழலில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது  நியூசிலாந்து மக்களுடன் மற்றும் உலக நாடுகளையும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2 ஆவது  மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கௌரவ  விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது தொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன், இந்த விருதை ஏற்றுக் கொள்வது பற்றி தான் இரண்டு மனதாக இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனி நபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தனது  குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் தன்னுடைய  வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க தன்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement