• May 07 2024

திருமலையில் திருட்டுச் சம்பவங்கள்..!ஐவர் கைது..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 12:24 pm
image

Advertisement

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இன்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து  தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20 ற்கும்  45 வயதுக்கும்  இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில்  இன்றைய தினம் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

திருமலையில் திருட்டுச் சம்பவங்கள்.ஐவர் கைது.samugammedia பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இன்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து  தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20 ற்கும்  45 வயதுக்கும்  இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில்  இன்றைய தினம் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement