தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 6ம் நாள் நினைவேந்தல் நகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்ச்சியான நினைவேந்தல் தினமும் காலை 9மணிக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.