• May 18 2024

கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி பரிதாப உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Aug 7th 2023, 4:38 pm
image

Advertisement

கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்தவரும் தெஹிவளையில் வசிப்பவருமான 24 வயதுடைய சிவலிங்கம் சிவப்பிரியா என்ற பெண்ணே இந்த விபத்தில் சாவடைந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி, பஸ்ஸால் இறங்கி வேலைத்தளத்துக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி, வீதிக் கடவை இல்லாத பகுதியால் வீதியைக் கடக்க முயன்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி பரிதாப உயிரிழப்பு.samugammedia கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவரும் தெஹிவளையில் வசிப்பவருமான 24 வயதுடைய சிவலிங்கம் சிவப்பிரியா என்ற பெண்ணே இந்த விபத்தில் சாவடைந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி, பஸ்ஸால் இறங்கி வேலைத்தளத்துக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த யுவதி, வீதிக் கடவை இல்லாத பகுதியால் வீதியைக் கடக்க முயன்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement