எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத அனைத்து தரப்பினர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதத்திற்கு தேவையான 80 கோடி ரூபா நிதி திறைசேரியிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் நிமல் புஞ்சிஹேவா வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.
எனினும் இதற்கு முன்னர் கோரப்பட்ட பத்து கோடி ரூபா பணம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் - நிமல் புஞ்சிஹேவா எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.எனினும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத அனைத்து தரப்பினர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பெப்ரவரி மாதத்திற்கு தேவையான 80 கோடி ரூபா நிதி திறைசேரியிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் நிமல் புஞ்சிஹேவா வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.எனினும் இதற்கு முன்னர் கோரப்பட்ட பத்து கோடி ரூபா பணம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.