தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் இரு பெண்கள் உட்பட மூவர் நேற்றைய தினம் மன்னார் பாலம் சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த மூவரே மேற்கண்டவாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் மன்னார் பாலம் பிரதான சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான பொருள் ஒன்றை தம் உடமையில் வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரனையின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.