• May 19 2024

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது...!

Sharmi / Apr 4th 2024, 3:37 pm
image

Advertisement

யாழில் திருட்டு தனமாக மாடுகளை கடத்திக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் யாழ் பண்ணைப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து இன்று(04) அதிகாலை 03 மணியளவில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனமொன்றில் யாழ் நோக்கி 08 மாடுகளைக் திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு சென்ற மூவர் யாழ்.பண்ணைப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது. யாழில் திருட்டு தனமாக மாடுகளை கடத்திக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் யாழ் பண்ணைப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து இன்று(04) அதிகாலை 03 மணியளவில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனமொன்றில் யாழ் நோக்கி 08 மாடுகளைக் திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு சென்ற மூவர் யாழ்.பண்ணைப் பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement