பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்ற தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த மூவரும் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்றநிலையில், குறித்த மூவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை samugammedia பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்ற தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த மூவரும் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில், இவர்கள் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்றநிலையில், குறித்த மூவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.