கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இன்று(12) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி வந்த டிப்பர் வாகனம் எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.