வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையில் இன்றையதினம் விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வலி. மேற்கு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது எண்ணப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயத்தில் திகழும் 10 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வின் போது இலைக் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்ட பணிப்பாளர், ஆயுர்வேத வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.