கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற தொடருந்தில் மோதுண்டு, பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த அமில பிரசாத் கருணாரத்ன என்ற 34 வயதுடையவரே மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்ட நபர், தொடருந்தில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளானார்.
அவரை மீட்ட பொதுமக்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடருந்து விபத்து: சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு samugammedia கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற தொடருந்தில் மோதுண்டு, பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் (25.042023) கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராக்கிரம மாவத்தை பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பகுதியைச் சேர்ந்த அமில பிரசாத் கருணாரத்ன என்ற 34 வயதுடையவரே மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்ட நபர், தொடருந்தில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளானார்.அவரை மீட்ட பொதுமக்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.