மினுவாங்கொடை, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 33 மற்றும் 43 வயதான இருவரும், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகிழுந்தொன்றில் பிரவேசித்த இருவர், உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இருவரையும் இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.