தலதா மாளிகையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராஜா வீதி வழியாக தலதா மாளிகை வளாகத்திற்குள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (18) பிற்பகல் நுழைந்த கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்தே குறித்த தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த லொறி தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது லொறியில் சிறிய உரப்பையில் வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் மேற்பார்வையில், பிரதான காவல்துறை பரிசோதகர் ஏ. சேனாதீர உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிமருந்து உறைகளுடன் நுழைந்த இருவர். தலதா மாளிகையில் பதற்றம். samugammedia தலதா மாளிகையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராஜா வீதி வழியாக தலதா மாளிகை வளாகத்திற்குள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.நேற்று (18) பிற்பகல் நுழைந்த கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்தே குறித்த தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து, குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த லொறி தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது லொறியில் சிறிய உரப்பையில் வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் மேற்பார்வையில், பிரதான காவல்துறை பரிசோதகர் ஏ. சேனாதீர உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.