• May 03 2024

மண்சரிவில் இருவர் பலி, 30 பேரை காணவில்லை! பிரேஸிலில் துயரம்!!

crownson / Dec 2nd 2022, 10:23 am
image

Advertisement

பிரேஸிலில்  ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

அதேவேளை, நெடுஞ்சாலையொன்றின்  ஒரு பகுதி மண்சரிவினால் மூடப்பட்டதுடன், 20 கார்கள். லொறிகள் உட்பட பல வாகனங்கள் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.

பிரேஸிலின் தென் பிராந்திய மாநிலமான பரானாவில் புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

உள்ளூர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஒரு வாகனத்துக்குள்  5 பேரும் இருக்க முடியும். 30 முதல் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிட்டுள்ளோம்' என்றார்.

பரானா மாநில பாதுகாப்புத்துறையினர் இது தொடர்பாக கூறுகையில், மீட்பு நடவடிக்கையில் 55 தீயணைப்பு வீரர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர், எனத் தெரிவித்துள்ளனர்.

2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அயலிலுள்ள குவாரதுபா நகரின் நகர மேயர் உட்பட 6 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மண்சரிவில் இருவர் பலி, 30 பேரை காணவில்லை பிரேஸிலில் துயரம் பிரேஸிலில்  ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.அதேவேளை, நெடுஞ்சாலையொன்றின்  ஒரு பகுதி மண்சரிவினால் மூடப்பட்டதுடன், 20 கார்கள். லொறிகள் உட்பட பல வாகனங்கள் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.பிரேஸிலின் தென் பிராந்திய மாநிலமான பரானாவில் புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.உள்ளூர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஒரு வாகனத்துக்குள்  5 பேரும் இருக்க முடியும். 30 முதல் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிட்டுள்ளோம்' என்றார்.பரானா மாநில பாதுகாப்புத்துறையினர் இது தொடர்பாக கூறுகையில், மீட்பு நடவடிக்கையில் 55 தீயணைப்பு வீரர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர், எனத் தெரிவித்துள்ளனர்.2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அயலிலுள்ள குவாரதுபா நகரின் நகர மேயர் உட்பட 6 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement