ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார இன்றையதினம் வட்டுக்கோட்டை மாவடி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவிற்கும்,
மக்கள் சந்திப்புக்காகவுமே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது அவருடன் முன்னாள் கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் ஐ.தே.க உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.