புத்தளம் பகுதியில் வானொன்று பஸ்ஸில் மோதி பின்னர் உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சித்தாலேப்ப மருந்துகளை ஏற்றிச் சென்ற வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதி பஸ் மற்றும் வான் வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து புத்தளம் பன்றி இறைச்சி சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றது.
குறித்த விபத்தில் வானில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வானின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளான வேன் மற்றும் பஸ். அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் samugammedia புத்தளம் பகுதியில் வானொன்று பஸ்ஸில் மோதி பின்னர் உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.கொழும்பிலிருந்து சித்தாலேப்ப மருந்துகளை ஏற்றிச் சென்ற வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதி பஸ் மற்றும் வான் வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து புத்தளம் பன்றி இறைச்சி சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றது.குறித்த விபத்தில் வானில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது வானின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதன்போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.