பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகேவை விடுதலை செய்யக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மௌனப் போராட்டம் தொடர்வதைத் தடுக்கும் வகையில் வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர்.
இருப்பினும் அவர் உண்மையில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் கைது செய்யுங்கள் என்றும் அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் அறிவித்தது.