• May 18 2024

வவுனியா தோணிக்கல் சம்பவம் - உயிரிழந்த பெண்ணின் கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..! samugammedia

Chithra / Jul 26th 2023, 6:27 am
image

Advertisement

வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மர்ம கும்பல் நடத்திய வாள் வீச்சு தாக்குதல் மற்றும் பெற்றோல் வீசி வீட்டிற்கு தீ வைத்திருந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில் 

வாள் வீச்சு இடம்பெற்றதில் படுகாயமைடந்த வீட்டின் உரிமையாளர் உட்பட 9 பேர் வரையில் எரிகாயங்களுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண்ணின் கணவரான சுகந்தன் என்பவர் முற்றிலும் எரிகாயத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று முன்தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 

அவரது உறவினர்களால் யாழில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

எனினும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 8பேர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது


வவுனியா தோணிக்கல் சம்பவம் - உயிரிழந்த பெண்ணின் கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. samugammedia வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மர்ம கும்பல் நடத்திய வாள் வீச்சு தாக்குதல் மற்றும் பெற்றோல் வீசி வீட்டிற்கு தீ வைத்திருந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில் வாள் வீச்சு இடம்பெற்றதில் படுகாயமைடந்த வீட்டின் உரிமையாளர் உட்பட 9 பேர் வரையில் எரிகாயங்களுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண்ணின் கணவரான சுகந்தன் என்பவர் முற்றிலும் எரிகாயத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று முன்தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து அவரது உறவினர்களால் யாழில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.எனினும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 8பேர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement