மின்சாரம், நீர், சமையல் எரிவாயு, உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்கவும், தேர்தலை வென்றெடுக்கவும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரால் சற்றுமுன் யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஐ.எம்.எவ் சாதனை மக்களுக்கு வேதனை, அநீதியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக குறை போன்ற வாசகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.