• May 19 2024

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் -திருமலையில்,16 ம் நாள் நிகழ்வு!

Tamil nila / Dec 14th 2022, 10:18 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (14) 16ம் நாள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



இந் நிகழ்வினையொட்டி கப்பல்துறையிலிருந்து திருகோணமலை  வரை மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் பரிசு 25000/=, இரண்டாம் பரிசு 20000/= ,மூன்றாம் பரிசு 15000/= வழங்கப்பட்டது

.


ஆறுதல் பரிசு 10 பேருக்கு 3000/= வழங்கப்பட்டது



 குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என். ஜெயவிக்ரம மற்றும் மனித உரிமைகள்  ஆணைக்குழு மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன்,

அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் உட்பட கந்தளாய் ,வெருகல் ,தம்பலகாமம் ,குச்சவெளி ,மூதூர் பிரதேச பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் -திருமலையில்,16 ம் நாள் நிகழ்வு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (14) 16ம் நாள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.இந் நிகழ்வினையொட்டி கப்பல்துறையிலிருந்து திருகோணமலை  வரை மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் பரிசு 25000/=, இரண்டாம் பரிசு 20000/= ,மூன்றாம் பரிசு 15000/= வழங்கப்பட்டது.ஆறுதல் பரிசு 10 பேருக்கு 3000/= வழங்கப்பட்டது குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என். ஜெயவிக்ரம மற்றும் மனித உரிமைகள்  ஆணைக்குழு மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன்,அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் உட்பட கந்தளாய் ,வெருகல் ,தம்பலகாமம் ,குச்சவெளி ,மூதூர் பிரதேச பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement