• May 18 2024

தொடருந்தில் செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி..! samugammedia

Chithra / Apr 23rd 2023, 7:49 am
image

Advertisement

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் அதே தொடருந்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வாகனத்தில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தொடருந்தில் செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி. samugammedia கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காயமடைந்த சிறுவன் அதே தொடருந்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வாகனத்தில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement