75இல் சிறிமாவிற்கு நடந்தது 2025 இல் ரணிலுக்கு ஏற்படும் - வரலாற்றை நினைவு படுத்திய உதய கம்மன்பில SamugamMedia கடந்த
காலத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த அனைத்து அரசாங்கங்களும் படுதோல்வியையே சந்தித்திருந்த வரலாறே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
SamugamMedia இன்று
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
SamugamMedia 1975ஆம்
ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க நாடாளுமன்ற தேர்தலை 2 வருடங்கள் ஒத்தி வைத்திருந்தாகவும் ஆனால் அதன் பெறுபேறு என்ன
என்றும் 1977ஆம் ஆண்டு பாரிய
படுதோல்வியாக அது அமைந்திருந்தாக உதய
கம்மன்பில நினைவு படுத்தியிருந்தார். SamugamMedia நல்லாட்சி
அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபை தேர்தலை ஒத்திவைத்ததன் காரணமாகவே ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளர்கள் கூட
வெற்றியடையவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
SamugamMedia எனவே
தேர்தலை ஒத்திவைத்தால் அது அரசாங்கத்திற்கு லாபம்
என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை என்றும்
உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். SamugamMedia நாட்டு
மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது
உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாகவும் அரச வைத்தியசாலைகளில் மருந்துகள்
இல்லை என்றும் தனியார் வைத்தியசாலைகளின் விலைகளை தாங்கிகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக உதய கம்மன்பில மேலும்
தெரிவித்திருந்தார். SamugamMedia
வரிசுமையினை
தாங்கி கொள்ள முடியாத நடுத்தர வர்க்கத்தினர் இன்று செய்வதறியாது நிர்கதியாகியுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
SamugamMedia