எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதி – சபையில் விளக்கிய டிலான் பெரேரா. SamugamMedia கடந்த
காலத்தில் மாகாண சபை தேர்தலை நிறுத்தியது
அன்ற பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எனவும் இன்று உள்ளுராட்சி மன்ற தேர்தலை நிறுத்தியதும்
இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். SamugamMedia இன்று
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
SamugamMedia தேர்தலை
நடத்துவவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகளை விடவும் தேர்தலை தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளே ரணிலின் அரசியல் வரலாற்றில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். SamugamMedia அடுத்த
ஜனாதிபதி யார் என்பதை சிந்திக்காது
இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை உள்ளதாக என்பதை
அறிவதற்காக உள்ளுராட்சி மன்ற தேர்தலை கட்டாயம்
நடத்த வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். SamugamMedia எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதியாக
வரவேண்டும் என தெரிவித்த டிலான்
பெரேரா பெண்கள் ஜனாதிபதியாக இருந்த போது நாட்டில் எந்த
தீமையான விடயங்களும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். SamugamMedia பட்டிகளை
இறுக்கி கொள்ளுமாறு மக்களை கேட்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் உள்ளவர்களின் பட்டிகளை இறுக்கி கொள்ளச் செல்லவில்லை என்றும் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியிருந்தார். SamugamMedia
மக்கள்
தமது பட்டிகளை இறுக்குவதற்கும் தியாகங்களை செய்வதற்கும் தயாராவே இருப்பதாகவும் ஆனால் அதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
SamugamMedia