• Sep 21 2024

வீட்டின் முன் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்..! 50 பேர் மீது வழக்குப் பதிவு samugammedia

Chithra / May 5th 2023, 4:21 pm
image

Advertisement

வீட்டின் முன் பெண் ஒருவரது சடலத்தை புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய  50 பேர் மீது பொலிசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இடம்பெற்றுள்ளது. 

கடந்த சில தினங்களிற்கு முன்னர்  8 மாத கர்ப்பிணியாகிய  நாகேஸ்வரி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் அரவிந்த், மாமியார் விஜயா, மாமனார் தங்கமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையிலே  உயிரிழந்த நாகேஸ்வரியின் சடலத்தை அவரது கணவர் அரவிந்தன் வீட்டு வாசலில் நாகேஸ்வரியின் உறவினர்கள் புதைத்துள்ளனர். 

உறவினர்கள் அத்துமீறி சடலத்தை புதைத்ததாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல் நிலையத்தில் விஜயாவின்  சகோதரர் அளித்த போரில் புகாரில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் புதைக்கப்பட்ட சடலம் வீட்டு வாசலின் முன்னர் புதைக்கப்பட்ட  அதே இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டின் முன் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம். 50 பேர் மீது வழக்குப் பதிவு samugammedia வீட்டின் முன் பெண் ஒருவரது சடலத்தை புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய  50 பேர் மீது பொலிசார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர்  8 மாத கர்ப்பிணியாகிய  நாகேஸ்வரி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் அரவிந்த், மாமியார் விஜயா, மாமனார் தங்கமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலே  உயிரிழந்த நாகேஸ்வரியின் சடலத்தை அவரது கணவர் அரவிந்தன் வீட்டு வாசலில் நாகேஸ்வரியின் உறவினர்கள் புதைத்துள்ளனர். உறவினர்கள் அத்துமீறி சடலத்தை புதைத்ததாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல் நிலையத்தில் விஜயாவின்  சகோதரர் அளித்த போரில் புகாரில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதைக்கப்பட்ட சடலம் வீட்டு வாசலின் முன்னர் புதைக்கப்பட்ட  அதே இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement