பெண்கள் அரசியலில் மதிக்கப்பட வேண்டும் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மூலம் திருகோணமலையில் இன்று (26) இடம் பெற்ற டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பில் இடம் பெற்ற செயலமர்வின் பின் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அதில் கலந்து கொண்ட சிவில் சமூக பெண் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜனனி திட்டம் ஊடாக நடை முறைப்படுத்தப்பட்ட குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய பெண்கள் பிரதிநிதிகள்,
இணையத்தளம் ஊடாக பெண்கள் துஷ்பிரயோகம் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் போன்றன இடம் பெறுகிறது இவ்வாறானவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் அதற்கான தண்டனைகளை வழங்கி பெண் உரிமைகள் அரசியலில் சரி எதுவாயினும் பாதுகாக்கப்பட வேண்டும் என கூட்டாக தெரிவித்தனர்.