பிரித்தானியாவில் உள்ள மெக்டோனால்ஸ் உணவகம் ஒன்றில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால்இ சுமார் 10 ஆயிரம் ரூபாய் பார்க்கிங்கில் அபராதம் விதிக்கப்பட்டது அந்த வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்தில் உள்ள நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டோனால்ஸ் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் ஷபூர் மெஃப்தா என்பவர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார்.
அப்போது அவர்கள் உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுள்ளனர். அதுவரை எல்லாம் சரியாகதான் இருந்துள்ளது.
அவர்கள் சாப்பிட்டு முடித்து பின்னர் பணம் கொடுக்க வந்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டோனால்ஸ் வாடிக்கையாளர்கள் கார் பார்க்கிங் செய்ய 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதால், 100 ஐரோப்பிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு வாடிக்கையாளர் ஷபூர் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.
இதுபோன்ற மிகவும் விலை உயர்ந்த மெக்டோனால்ஸை தான் எங்கும் பார்த்ததில்லை என அவர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"நாங்கள் உணவருந்தி வந்த மெக்டோனால்ஸின் எந்த இடத்திலும் 90 நிமிடங்கள் வரை மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. உணவை அவசரமாக சாப்பிட நாங்கள் விரும்பவில்லை. மேலும், சற்று அதிகமாக உணவை நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம்" என்றார்.
ஜனவரி 4 மற்றும் ஜனவரி 6, 2023 ஆகிய இரண்டு வெவ்வேறு நாட்களில் நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்கு அவர் இரண்டு முறை சென்றதால், பார்க்கிங் நிறுவனம் அவருக்கு சுமார் 10,000 ரூபாய்க்கான இரண்டு நிலையான அபராத அறிவிப்புகளை வழங்கியது.
ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் 10ஆயிரம் ரூபா அபராதம்- அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பிரித்தானியாவில் உள்ள மெக்டோனால்ஸ் உணவகம் ஒன்றில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால்இ சுமார் 10 ஆயிரம் ரூபாய் பார்க்கிங்கில் அபராதம் விதிக்கப்பட்டது அந்த வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்தில் உள்ள நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டோனால்ஸ் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் ஷபூர் மெஃப்தா என்பவர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுள்ளனர். அதுவரை எல்லாம் சரியாகதான் இருந்துள்ளது. அவர்கள் சாப்பிட்டு முடித்து பின்னர் பணம் கொடுக்க வந்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டோனால்ஸ் வாடிக்கையாளர்கள் கார் பார்க்கிங் செய்ய 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதால், 100 ஐரோப்பிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு வாடிக்கையாளர் ஷபூர் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார். இதுபோன்ற மிகவும் விலை உயர்ந்த மெக்டோனால்ஸை தான் எங்கும் பார்த்ததில்லை என அவர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"நாங்கள் உணவருந்தி வந்த மெக்டோனால்ஸின் எந்த இடத்திலும் 90 நிமிடங்கள் வரை மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. உணவை அவசரமாக சாப்பிட நாங்கள் விரும்பவில்லை. மேலும், சற்று அதிகமாக உணவை நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம்" என்றார். ஜனவரி 4 மற்றும் ஜனவரி 6, 2023 ஆகிய இரண்டு வெவ்வேறு நாட்களில் நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்கு அவர் இரண்டு முறை சென்றதால், பார்க்கிங் நிறுவனம் அவருக்கு சுமார் 10,000 ரூபாய்க்கான இரண்டு நிலையான அபராத அறிவிப்புகளை வழங்கியது.