சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று முன்னோக்கி செல்வதை யாராவது எதிர்ப்பார்களாயின் அவர்கள் இந்த நாட்டை மீட்பதற்காக மாற்றுவழியை முன்வைக்குமாறு, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திரந்தார்.
சர்வதேச நாணய நிதியமோ அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ நலத்திட்டங்களை தடுக்கவில்லை என்றும் குறிப்பாக சமுர்த்தி போன்ற நிவாரண திட்டங்களை தகுயானவர்களை தேர்ந்தெடுத்து வழங்குமாறே அவர்கள் குறிப்பிடுவதாக அமைச்சர் மேலும் தெரவித்துள்ளார்.
சமுர்த்தி பெறுகின்ற 12 சதவீதத்தினர் உரிய தகைமைகளை கொண்டிருந்க்கவில்லை என்பது தற்போதைய ஆய்வில் இருந்து
தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக வருமானம் பெறுகின்ற 12 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவை கொடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த 12 சதவீதமானவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகளையே நிறுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுவதாக நிமல் சிறிபால டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதிக வருமானம் பெறுகின்ற 12 சதவீதமானோர் சமுர்த்தி பெறுகின்றனர் - நிறுத்துமா அரசு - வெளியான உண்மை samugammedia சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று முன்னோக்கி செல்வதை யாராவது எதிர்ப்பார்களாயின் அவர்கள் இந்த நாட்டை மீட்பதற்காக மாற்றுவழியை முன்வைக்குமாறு, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திரந்தார்.சர்வதேச நாணய நிதியமோ அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ நலத்திட்டங்களை தடுக்கவில்லை என்றும் குறிப்பாக சமுர்த்தி போன்ற நிவாரண திட்டங்களை தகுயானவர்களை தேர்ந்தெடுத்து வழங்குமாறே அவர்கள் குறிப்பிடுவதாக அமைச்சர் மேலும் தெரவித்துள்ளார்.சமுர்த்தி பெறுகின்ற 12 சதவீதத்தினர் உரிய தகைமைகளை கொண்டிருந்க்கவில்லை என்பது தற்போதைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதிக வருமானம் பெறுகின்ற 12 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவை கொடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த 12 சதவீதமானவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகளையே நிறுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுவதாக நிமல் சிறிபால டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.