முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது ஒரு மோசமான செயற்பாடு என்றும் இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏதாவது திருத்த சட்ட நகலொன்று சட்டமாக நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுவதாகவும் கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்க அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றனர்.
இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது.
சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
13வது திருத்த சட்டத்தை பிக்குகள் எரித்தமை ஒரு மிலேச்சத்தனமான செயல்-வியாழேந்திரன் கருத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது ஒரு மோசமான செயற்பாடு என்றும் இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் ஏதாவது திருத்த சட்ட நகலொன்று சட்டமாக நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுவதாகவும் கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்க அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றனர்.இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது.சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்