• May 18 2024

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்! samugammedia

Tamil nila / Oct 29th 2023, 5:28 pm
image

Advertisement

இன்று அதிகாலை இலங்கை - நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.



நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் samugammedia இன்று அதிகாலை இலங்கை - நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement