• May 18 2024

காதலியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற 17 வயது மாணவன் மாயம்..! - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Chithra / Apr 3rd 2024, 8:10 am
image

Advertisement

காலியில் தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் காதலியின் கருத்து தொடர்பில் மாணவனின் உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

காலி  வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜங்கள் கடற்கரையில் இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். 

அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை எனவும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற 17 வயது மாணவன் மாயம். - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் காலியில் தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.இருப்பினும் காதலியின் கருத்து தொடர்பில் மாணவனின் உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.காலி  வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஜங்கள் கடற்கரையில் இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை எனவும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹபராதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement