உக்ரைன், தலைநகர் கீவ் பகுதியில், நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களால், 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆளுநர் தெரவித்துள்ளார்.
இது குறித்து, கிய்வ் பிராந்தியத்தின் ஆளுநரான ஒலெக்ஸி குலேபா, கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது 18 தனியார் வீடுகள் சேதமடைந்ததாக குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் வலியுறுத்தினார். இதேவேளை இந்த தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.