ஹப்புத்தளை – பத்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன், எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளதுடன் அதில் இருந்து டீசல் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எரிபொருள் கொள்கலன் ஊர்தி வீடு ஒன்றுடன் மோதியுள்ள நிலையில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தினால், டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 ஆயிரம் லீட்டர் டீசல் ஊர்தி விபத்து – அள்ளிச்செல்லும் பொதுமக்கள்.samugammedia ஹப்புத்தளை – பத்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன், எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளதுடன் அதில் இருந்து டீசல் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.காயமடைந்த ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.எரிபொருள் கொள்கலன் ஊர்தி வீடு ஒன்றுடன் மோதியுள்ள நிலையில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தினால், டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.