கென்யாவில் உள்ள காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 47 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கென்யா காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர்.
உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்லமுடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.
எனினும் இந்த கருத்தை பரப்பிய பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அந்த காட்டின் அருகே, பட்டினியால் வாடிக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க உறுப்பினர்களை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
பாதிரியாரின் போதனையை கேட்டு பலியான உயிர்கள்; 47 பேரின் சடலங்கள் காட்டில் கண்டுபிடிப்பு - உயிருக்கு போராடிய நிலையில் பலர் மீட்பு samugammedia கென்யாவில் உள்ள காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 47 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கென்யா காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர்.உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்லமுடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.எனினும் இந்த கருத்தை பரப்பிய பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இறந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு, அந்த காட்டின் அருகே, பட்டினியால் வாடிக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க உறுப்பினர்களை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.