• May 23 2024

மின்சாரம் தாக்கி உயிர் இழந்த நபருக்கு 50 லட்சம் இழப்பீடு!!

crownson / Dec 9th 2022, 6:36 am
image

Advertisement

மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நல்லையா சிவகுமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கநேற்றைய தினம் 08.12.2022 ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவிக்கு குறித்த தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குடும்பத்தினருக்கு 20 பேர்ச் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்து மூலம் ஆவணத்தை ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்தனர்.

ஹொரண பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான சாமிமலை கவரவில தோட்டத்தில் வசித்து வந்த நல்லைய சிவகுமார் என்ற 33 வயது உடைய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இம்மாதம் ஐந்தாம் திகதி உயிரிழந்தார்.

அத்துடன் மின்சாரம் தாக்கிய தான் அவரது மரணம் ஏற்பட்டுள்ளதா என கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்தது.

இதன் அடிப்படையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீடு தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையையும் குறித்த பெருந்தோட்ட கம்பெனிக்கு முன் வைத்தனர்.

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் உயிரிழந்த நல்லையா சிவகுமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிர் இழந்த நபருக்கு 50 லட்சம் இழப்பீடு மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நல்லையா சிவகுமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கநேற்றைய தினம் 08.12.2022 ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் மனைவிக்கு குறித்த தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த குடும்பத்தினருக்கு 20 பேர்ச் காணியும் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து மூலம் ஆவணத்தை ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்தனர். ஹொரண பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான சாமிமலை கவரவில தோட்டத்தில் வசித்து வந்த நல்லைய சிவகுமார் என்ற 33 வயது உடைய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இம்மாதம் ஐந்தாம் திகதி உயிரிழந்தார்.அத்துடன் மின்சாரம் தாக்கிய தான் அவரது மரணம் ஏற்பட்டுள்ளதா என கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்தது. இதன் அடிப்படையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீடு தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையையும் குறித்த பெருந்தோட்ட கம்பெனிக்கு முன் வைத்தனர்.இதன் அடிப்படையில் நேற்றைய தினம் உயிரிழந்த நல்லையா சிவகுமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement