யாழ்ப்பாணம் செம்மணி நுழைவு வாயிலிலுக்கு அருகாமையில் சிவபூமி அறக்கட்டளையினரால் 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் நேற்றையதினம் மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த சிவலிங்கம் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிவபூமி அறக்கட்டளையினரால் கடந்த சில வருடங்களக்கு முன்னர் நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனை மற்றும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை கூறும் அரும்பொருட்களின் காட்சியகமான 'சிவபூமி அருங்காட்சியகம்' போன்றன திறந்துவைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக சிவபூமி அறக்கட்டளையினரால் இந்து சமயத்தினை மேலோங்கச் செய்த பெரியார்களுக்கும் சிலை வைத்து அவர்களை நினைவுகூறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நுழைவுவாயிலில் 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் அமைக்கப்பட்டமை தொடர்பில் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாழ் செம்மணியில் 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் பிரதிஷ்டை யாழ்ப்பாணம் செம்மணி நுழைவு வாயிலிலுக்கு அருகாமையில் சிவபூமி அறக்கட்டளையினரால் 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் நேற்றையதினம் மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்நிலையில் குறித்த சிவலிங்கம் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை சிவபூமி அறக்கட்டளையினரால் கடந்த சில வருடங்களக்கு முன்னர் நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனை மற்றும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை கூறும் அரும்பொருட்களின் காட்சியகமான 'சிவபூமி அருங்காட்சியகம்' போன்றன திறந்துவைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக சிவபூமி அறக்கட்டளையினரால் இந்து சமயத்தினை மேலோங்கச் செய்த பெரியார்களுக்கும் சிலை வைத்து அவர்களை நினைவுகூறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் யாழ்ப்பாணம் நுழைவுவாயிலில் 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் அமைக்கப்பட்டமை தொடர்பில் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.