நெடுந்தீவுக்கு வைத்தியராக சென்று இனம், மதம், மொழி கடந்து அன்பால் மக்களை கவர்ந்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய பண்டாரகம - களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் தொர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியர் சேவையை பெற்றுக்கொள்வதில் தீவுப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
தூரம், கடல் பிரயாணம், வசதி வாய்ப்புகளில் பின்தங்கிய நிலை காரணங்களால் விருப்போடு சேவையாற்ற வருவதில் பலரும் பின்னடிப்பர்.
இவ்வாறானதொரு நிலையில் பல மைல் தொலைவிலிருந்து வருகைதந்து அர்ப்பணிப்போடு சேவையாற்றுவதற்கு முன்வரும் சிலரில் குறித்த வைத்தியர் பாராட்டுக்குரியவர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
வைத்தியர் பணிக்கு அப்பால் வெற்றிடமேற்படும் பல தரப்பட்ட வேலைகளிலும் தன்னையும் ஊழியராக ஈடுபடுத்தி சேவையாற்றி வந்துள்ளார்.
இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்து மக்களை நேசித்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய வைத்தியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நெடுந்தீவு மக்களால் வியந்து பார்க்கப்படும் சகோதர மொழி பேசும் வைத்தியர் samugammedia நெடுந்தீவுக்கு வைத்தியராக சென்று இனம், மதம், மொழி கடந்து அன்பால் மக்களை கவர்ந்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய பண்டாரகம - களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் தொர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.வைத்தியர் சேவையை பெற்றுக்கொள்வதில் தீவுப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர். தூரம், கடல் பிரயாணம், வசதி வாய்ப்புகளில் பின்தங்கிய நிலை காரணங்களால் விருப்போடு சேவையாற்ற வருவதில் பலரும் பின்னடிப்பர்.இவ்வாறானதொரு நிலையில் பல மைல் தொலைவிலிருந்து வருகைதந்து அர்ப்பணிப்போடு சேவையாற்றுவதற்கு முன்வரும் சிலரில் குறித்த வைத்தியர் பாராட்டுக்குரியவர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.வைத்தியர் பணிக்கு அப்பால் வெற்றிடமேற்படும் பல தரப்பட்ட வேலைகளிலும் தன்னையும் ஊழியராக ஈடுபடுத்தி சேவையாற்றி வந்துள்ளார்.இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்து மக்களை நேசித்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய வைத்தியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.