• May 18 2024

யாழில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசம்..!samugammedia

Sharmi / Aug 22nd 2023, 3:55 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்றையதினம் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த 2 அலுமாரிகள், 5 கதிரைகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, ஒரு துவிச்சக்கர வண்டி, ஒரு மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு தொகை பணம் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பன இதன்போது தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி சமையலை முடித்துவிட்டு, அருகில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என அறியமுடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசம்.samugammedia வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்றையதினம் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.இதன்போது வீட்டில் இருந்த 2 அலுமாரிகள், 5 கதிரைகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, ஒரு துவிச்சக்கர வண்டி, ஒரு மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு தொகை பணம் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பன இதன்போது தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி சமையலை முடித்துவிட்டு, அருகில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என அறியமுடியவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement