• May 03 2024

12வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை!

Sharmi / Jan 26th 2023, 3:23 pm
image

Advertisement

குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் இன்றைய தினம் வியாழக்கிழமை(26) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி யாழ்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லைராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லைராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு மன்னார் மேல் நீதி மன்றத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மேல் நீதி மன்ற நீதிபதி தில்லைராஜ் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தில்லைராஜ் 12 வருடங்களின் பின் தான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன். 

எனக்காகவும் என் விடுதலைக்காகவும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்சியாக முன்னிலையாம சிரேஸ்ர சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுக்கும் அவரது உதவியாளர் தாயளனுக்கும் அதே போன்று யாழ் மாவட்டத்தில் 2016 ஆண்டு இடம் பெற்ற வழக்கில் என் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரெமிறியேஸுக்கு நன்றிகள்.

நான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 12 வருடம் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கின்றேன் என்னை போன்று என்னும் 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் எங்களுடம் ஒன்றாக இருந்த பலர் இன்னும் சிறைப்பட்டு இருக்கின்றார்கள் அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.





12வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் இன்றைய தினம் வியாழக்கிழமை(26) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி யாழ்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லைராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லைராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு மன்னார் மேல் நீதி மன்றத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மேல் நீதி மன்ற நீதிபதி தில்லைராஜ் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தில்லைராஜ் 12 வருடங்களின் பின் தான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன். எனக்காகவும் என் விடுதலைக்காகவும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்சியாக முன்னிலையாம சிரேஸ்ர சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுக்கும் அவரது உதவியாளர் தாயளனுக்கும் அதே போன்று யாழ் மாவட்டத்தில் 2016 ஆண்டு இடம் பெற்ற வழக்கில் என் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரெமிறியேஸுக்கு நன்றிகள்.நான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 12 வருடம் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கின்றேன் என்னை போன்று என்னும் 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் எங்களுடம் ஒன்றாக இருந்த பலர் இன்னும் சிறைப்பட்டு இருக்கின்றார்கள் அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement